விலகியோடுங்கள்
வீணான
தத்தவங்களே!
பேய் பிசாசுகளை
போல
விரட்டாதீர்கள்…
சூழ்ந்து
முற்றுகையிடாதீர்கள்..
உங்களால்
விளைந்தது தானென்ன?
மண்டையை
கிறுகிறுக்க
வைத்து
குழப்பியதைத் தவிர?
ஒரு தெளிவை தந்துண்டா
நீங்கள்?
ஆன்மாவை
முறித்து முடக்கி
போட்டதை தவிர?
வானம் அருளுகிறது,
மேகங்கள் திரண்டு
மலைமுகட்டில்
மோதி நின்று
பொழிகின்றன,
பூமி
செழிக்கிறது ….
எங்களுக்கு எல்லா வளத்தையும்
அள்ளித் தரும்
இயற்கையே
எங்கள் தேவைகளை
பூர்த்தி செய்து கொள்ள
ஆற்றலையும்
அறிவையும்
தூர்ந்து போகாமல்
எங்கள் உடலிலும்
உள்ளத்திலும்
ஊற்றெடுக்க வைக்கிறது…..
நாங்களெதற்கு
வீணாக வலிந்து
துடுப்பு போட
வேண்டும்?
படகை
கடலின்
இழுவை
அவரவர் கரைகளுக்கு
தானாக
இழுத்துச் செல்லும்போது!