நான் இறந்த பின்…


 

அத்துவிதமாக
அப்பில்
உப்பு போல
அதில்
இரண்டற
கலந்து
நிக்கமாட்டேன்…

சுவர்க்கத்தின்
சோலைகளில்
நரகத்தின்
தீக்குழிகளில்
தேடவேண்டாம்…
இரவுகளில்
ஒற்றை புளியமரங்களிலும்
வேப்ப மரங்களிலும்
சுடுகாடுகளிலும்
பாழடைந்த
தூர்ந்த
இடிபாடுகளிலும்
பேயாக
பிசாசாக
அலைந்து கொண்டிருக்க
மாட்டேன்…

புதைந்து
கிடப்பேன்
என் வரிகளுக்கிடையில்
வார்த்தைகளுக்கு
மத்தியில்…

எல்லாம்
உங்கள்
உதடுகளில்
இருக்கிறது…

ஆம் அன்பர்களே!
நண்பர்களே!
அவை மட்டும்
என் வார்த்தைகளை
உச்சரித்தால்
உயிர் வாழ்வேன்
மரணத்துக்கு
அப்பாலும்…

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.