வித்தியாசமான சமயம்
விடியலுக்கு முன்னான
அந்த ஒன்றரை மணிநேரம்.
பிரம்ம முகூர்த்தம்….
சொல்லக் கேட்டிருக்கிறேன்
இரண்டு உலகங்களுக்கிடையே
வாசல் திறக்கும் நேரம்…..
ரூமியின் பாட்டைப் படித்திருக்கிறேன்
தெரியாதெனக்கு உட்பொருளெல்லாம்.
விசித்திரமாக
விடைகள் கிடைத்திருக்கின்றன
அந்த வித்தியாசமான சமயங்களில்
வினாக்கள் பலவற்றிற்கு.
சிவ்வென்று பறக்கத்தூண்டும்
விண்ணில்
சில விடைகள்
விடுதலையாக்கி
கழுவேற்றிக் கொல்லும்
காலையிலேயே
சில உண்மைகளும்!
Advertisements