என்னிடம்
வேறேதும்
செல்வங்கள் இல்லை,
என் எண்ணங்களை தவிர,
என் சொத்தெல்லாம்
என் எண்ணங்களே.
உன்னைப் பற்றிய
என் எண்ணங்கள் எல்லாம்
என் மனதில்
பார்த்து பார்த்து
வார்க்கப்பட்ட
பொற்காசுகள்.
ஆனால் மிச்சம்
வைக்காமல்
செலவழிப்பேன்
என் எண்ணங்களை,
ஆம் !ஏட்டில்
எழுதி வைப்பேன்,
பாட்டுக்களாய்
பாடி வைப்பேன்…
ஏனெனில் சாவுக்கு
இப்பக்கம்
அவற்றை
செலவழித்து, பாடிவைத்து விட வேண்டும்,
அப்போது தானே
அவை அமரத்துவம் பெறும்?