மனிதம்…
எந்த மனிதனிலும்
மனிதம்
மிச்சமிருக்கும்
சொற்ப
அளவிளேனும்
மக்களே!
அவன் நல்லவனா
கெட்டவனா
என்றாராய்ந்து
கொண்டிருக்காமல்
அவனில்
எஞ்சியிருக்கும்
மனிதத்தோடு
கைகுலுக்குவோம்
உரையாடுவோம்
உறவாடுவோம்
மக்களே!
மனிதத்தை
முன்னிறுத்தி
மனிதத்தை
போற்றுவோம்..
இன்னும்
முழுக்க
வறண்டு விடவில்லை…
அருகினாலும்
இன்னும்
ஈரம்
உலரவில்லை…
போற்றி
பெருக்குவோம்
மனிதத்தை
மானுடம்
வெல்ல…
நானும்
என்னை
நிறுவவோ,
முன்னிறுத்தவோ,
இனி
கவிதை
எழுதமாட்டேன்..
இயன்றவரை
மனிதத்தையே
நிறுவ,
முன்னிறுத்தப் பாடுவேன்..